• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சுற்றாடல் அழிவுக்கு அதிகாரிகளே காரணம்! மஹிந்த…

Editor by Editor
November 7, 2020
in இலங்கைச் செய்திகள்
0
சுற்றாடல் அழிவுக்கு அதிகாரிகளே காரணம்!  மஹிந்த…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இலங்கையில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை “தவறான செய்தி – புனைகதை” என ஜனாதிபதி நிராகரித்த நிலையில், சுற்றுச்சூழல் அழிவுக்கான பொறுப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.

புத்தளம் மாவட்டத்தில் சில தனிநபர்களின் செயற்பாடுகளால் அவ்வப்போது சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனினும் அந்த அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே சுற்றாடல் பாதிப்பு இடம்பெறுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கமைய நாட்டின் அனைத்து சுற்றுச்சூழல் அதிகாரிகளையும் வரவழைத்து, அவர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்கிறார்களா என்பது குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு, அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தல் – புலுதிவயல் பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் சதுப்புநிலம் அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

இது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை, மற்றும் முந்தல் பிரதேச செயலாளரிடம் விசாரணை மேற்கொண்ட அமைச்சர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

”இந்த சதுப்புநில பிரதேசம் தனிநபரின் நிலம் என்பதோடு, இது இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சதுப்புநில அமைப்பு அமைந்துள்ள நிலம் தனியார் நிலமாக காணப்பட்டாலும் சதுப்பு நிலங்களை அழிப்பது சட்டவிரோதமானது என்பதால் நபர் அல்லது நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் கோரியுள்ளார்.

புத்தளம் சதுப்பு நில அழிவுக்கு அமைச்சர் அமரவீரா அதிகாரிகளை குற்றம் சாட்டினாலும், இந்த வருட ஆரம்பத்தில் பேரழிவிற்கு அரசியல்வாதிகள் துணை நிற்பதாக, அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஆளும் கட்சி அரசியல்வாதியின் ஆதரவுடன் ஈரநில பிரதேசம் ஒன்றை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் கம்பஹா மாவட்ட வனவள அதிகாரி தேவானி ஜயதிலக எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஊடக அறிக்கைகளை ஜனாதிபதி சமீபத்தில் மறுத்திருந்தார், இது “தவறான செய்திகளை உருவாக்குவதற்கும், சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை” என அவர் குறிப்பிட்டார்.

எனினும், காடழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் கீழ் பல இடங்களில் சுற்றாடல் அழிவு நிகழ்வதாக எதிர்க்கட்சி தொடர்ந்தும் குற்றம் சாட்டுகிறது.

இந்சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமைச்சரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கமான 0707-555666 இற்கு வட்ஸ்அப் தகவல், குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தகவல்களை வழங்க, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசு ஒருபோதும் தயாரில்லை!

Next Post

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 3பேர் பலி!!

Editor

Editor

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு!  3பேர் பலி!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 3பேர் பலி!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy