கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக ஒரு நாளில் ஆறு கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் இரசாயன கூட செலவுகள் மாத்திரம் தினமும் 06 கோடி ரூபாவாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வைரஸ் தொற்று நோயாளியை இனம் காண்பதற்காக 06 ஆயிரம் ரூபாவை செலவிட்டு வருவதாக மேற்படி இரசாயன கூடத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாட்டில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேற்று முன்தினம் மாத்திரம் 11,824 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றுவரை 80 ஆயிரத்து 598 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்