அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு அண்டை நாடான மெக்ஸிக்கோவின் ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் பென்சில்வேனியா, நவேடாவில் வெற்றி பெற்று ஜோ பைடன் பெரும்பான்மையை கைப்பற்றி வெற்றிப்பெற்றார்.
இதனையடுத்து, ஜோ பைடனுக்கு பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி Andres Manuel Lopez Obrador, ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவடையும் வரை அவரால் வாழ்த்து தெரிவிக்க முடியாது எனவும், அவருடைய இந்த முடிவு ‘அரசியல் ரீதியாக விவேகமானது’ என்று கூறினார்.
மேலுல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுடன் நல்லுறவு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.