இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மார்ச் மாதம் இரு மரணங்களும் ஏப்ரலில் 5 மரணங்களும் மே மாதம் 3 மரணங்களும் ஜூன் மாதம் ஒரு மரணமும் ஓகஸ்ட் மாதம் ஒரு மரணமும் செப்டெம்பரில் ஒரு மரணமும் ஒக்டோபரில் 7 மரணங்களும் நவம்பரில் 14 மரணங்களும் பதிவாகியுள்ளன.



















