தீவிர கடும்போக்கு கொள்கைகளை கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலீபாக்களினால் ஆட்சி செய்யப்படும் இஸ்லாமிய தேசமாக ஐ.எஸ் தீவிரவாதிகளினால் உருவகிக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்ததனைத் தொடர்ந்து இவ்வாறு கடும்போக்குடைய தீவிரவாதிகள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் தெரிவிக்கின்றது.
தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக். இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் உள்ள நஞ்சாக என்கிற கிராமத்துக்குள் சுமார் 100 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
பின்னர் அவர்களை அங்கு உள்ள ஒரு கால் பந்தாட்ட மைதானத்துக்கு அழைத்து சென்று அனைவரையும் தலைகீழாக தொங்கவிட்டு ஒவ்வொருவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இப்படி 50-க்கும் அதிகமானோரின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் செய்தி இலங்கையும் அதிலொன்று எனவும் ஐ.எஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது, சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என குறித்த சன் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவங்களால் தற்போது இலங்கை மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது, ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர், தாக்குதல் நடத்தலாம் என இந்திய, அமெரிக்க உளவு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்த போதல்லாம் இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் குறித்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.
அப்படியொரு சூழ்நிலையில்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று பல நூறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தது, இந்த கொடூர சம்பவங்களின் பின்னர் இலங்கை பெரும்பான்மையின மக்கள் பயங்கரவாத தாக்குதல் என்றால் என்ன என்பதையும், இதனால் ஏற்படும் விளைவுகளையும் விளங்கிக்கொண்ட முதல் தருணமாக அமைந்தது.
இதனால்தான் சன் செய்தித்தாள் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து, வரும் நாட்களில் தீபாவளியும், கிறிஸ்துமஸ் பண்டிகைகளும் வர இருக்கின்றன நிலையில் இலங்கை மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் சரியான விசாரணைகளை மேற்கொண்டு, இலங்கை அரசாங்கம் சரியான விளக்கமொன்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.