இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.
சாதாரண டீக்கடை தொடங்கி பிரமாண்டமான ஐ.டி நிறுவன கேன்டீன் வரை இப்படித்தான், டீயும் காபியும் விநியோகிக்கப்படுகின்றன.
இருப்பினும் இதுபோன்ற பேப்பர் கப்களில் டீ, காபி அருந்துவதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றது என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் ஏன் பேப்பர் கப்களில் டீ, காபி குடிக்க கூடாது? இதனால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.
ஏன் குடிக்க கூடாது?
பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்து, அது ஒழுகிவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுகிறது.
பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகுதான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
- தொடர்ச்சியாக, வெகு நாள்களுக்கு இதில் சூடான பானங்களைக் குடித்துவந்தால், அதிலுள்ள மெழுகு கரைந்து, நம் உடலுக்குள் சென்று, மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
- இதைப் பயன்படுத்தும் இளம் வயதினருக்கு உடல்பருமன், சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
- இது, பெண்களுக்குப் பல்வேறு ஹார்மோன் பிரச்னைகளை உண்டாக்குவதால், பருவமடைவதில் சிக்கல், மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
குறிப்பு
முடிந்தவரை பேப்பர் கப்பைத் தவிர்த்துவிட்டு, சில்வர், பித்தளை வகை டம்ளர்களைப் பயன்படுத்துவது சிறந்து.




















