• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் புதிய அரசியலமைப்பு குழு தெரிவு

Editor by Editor
November 21, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் புதிய அரசியலமைப்பு குழு தெரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் அடங்கிய புதிய வரைவு ஒன்றினை தயாரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காக பொதுமக்களிடம் இருந்து யோசனைகளை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையினை பொறுத்தவரையில் 1978ஆம் ஆண்டு இறுதியாக ஒரு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. அது 20ஆவது திருத்தங்களுடன் இன்று இருந்து கொண்டுள்ளது.

புதிய அரசாங்கம் வந்ததன் பின் புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக இம்முறை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு யோசனைகளை எம்மால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவொன்று ஆராய்ந்து அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு குழுவொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணி கமலதாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் விஞ்ஞான பட்டதாரியுமான ஞா.சிறிநேசன், வடகிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கிருஸ்ணமோகன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் ஊடாக அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த அரசியலமைப்பு யோசனைகள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளையின் அங்கீகாரத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் வழங்கப்படும். தலைமை அதனை ஆராய்ந்த பின்னர் அவர்கள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்திடம் வழங்கும்.

இதிலே அதிகமாக சிறுபான்மையின் மக்களின் அபிலாசைகளை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

மாகாணசபை முறைமை, அதற்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள், அரசின் தன்மை, அடிப்படை உரிமைகள், மொழி, அரச கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள், அதிகாரங்கள் பண்முகப்படுத்துதல், அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு, நீதித்துறை போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்பட்டு அதற்கான வரைவுகள் வரையப்பட்டுள்ளன.

இவைகள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான நிபுணர்குழு ஆராய்ந்து எமது யோசனைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு தொடர்பில் நாங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை சந்திது அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஆனால் அங்கு நடைபெறும் அத்துமீறல்களை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக இதனை தடுத்து நிறுத்துவதற்கு கொழும்பில் ஒரு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

இந்த மாதம் பூர்த்தியடைவதற்குள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும். இந்த ஆட்சியானது சிறுபான்மை சமூகத்தினை ஒதுக்கி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கிழக்கு தொல்பொருள் செயலணியை ஆரம்பித்துள்ளனர். அதில் முற்றுமுழுதாக பௌத்த மதகுருமாரையும் படைத்தரப்பினர் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த எவரும் இணைத்து கொள்ளப்படவில்லை.

சிறுபான்மை இனமக்களை தள்ளிவைத்தே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை, அபிலாசைகளை பெறுவதற்கு வரப்போகும் அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை மட்டக்களப்பில் இருந்து அனுப்புகின்றோம் என்று கூறியுள்ளார்.

Previous Post

வழமை நிலைக்கு திரும்பும் இலங்கை! இராணுவ தளபதி…

Next Post

கொழும்பில் தப்பி சென்ற கொரோனா பெண்! பொலிஸார் தீவிர நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
இலங்கைச் செய்திகள்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.
இலங்கைச் செய்திகள்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைச் செய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
Next Post
கொழும்பில் தப்பி சென்ற கொரோனா பெண்! பொலிஸார் தீவிர நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்

கொழும்பில் தப்பி சென்ற கொரோனா பெண்! பொலிஸார் தீவிர நடவடிக்கை... வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025

Recent News

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy