• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?

Editor by Editor
November 22, 2020
in உலகச் செய்திகள்
0
ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

ஆனால் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் கைச்சாத்திட்டுள்ள நிலையில், குவாட் பயிற்சியின் பிரதான நோக்கம் எவ்வாறு அமையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் தொடர்ந்தும் ஒத்துழைக்குமென இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க புதுடில்லியில் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் அமெரிக்கா விலகியதையடுத்து ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership) (TPP) 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் சீனா மாத்திரம் அனைத்து லாபங்ளையும் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் அல்லது, பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக நகர்வுகளை அவதானிப்பதற்காகவே அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா வலியுறுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. அப்படிப் பார்த்தால், சீனாவின் வர்த்தக நகர்வை அவதானிப்பதற்காக TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்குள் நுழைந்த அமெரிக்கா பின்னர் ஏன் விலகியது என்ற கேள்வியும் உண்டு.

அவ்வாறு விலகியமை டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம். ஏனெனில் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதால், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கியிருக்கலாம்.

ஆகவே ஜனவரி மாதம் ஜோ பைடன் நிர்வாகம் பதவியேற்றதும் அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பொருளாதார ரீதியான செயற்பாடுகளில் மாத்திரம் சீனாவை மையப்படுத்திய கூட்டு ஒப்பந்தங்களில் தனது நட்பு நாடுகள் இணைவதற்கு சம்மதிக்கக் கூடிய வாய்ப்புகள் வரலாம்.

அப்படியானால் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்த இந்தியா இணையக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். இந்தியா இணையும் என்று உறுப்பு நாடுகள் எதிர்ப்பார்ப்பதாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பொருளாதாரச் செயற்பாடுகளில் சீனாவின் நகர்வுகளுக்கு முன்னால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கும், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் நின்று பிடிக்க முடியாதவொரு நிலமையைத்தான் RCEP எனப்படும் ஒப்பந்தம் வெளிப்படுத்தியிருக்கிறதென வாதிடலாம்.

வாதத்தின்படி இதுதான் உண்மைக் காரணம் என்றால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையக் கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றிலும் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கைச்சாத்திட்டதன் எதிர்காலப் பயன்பாடு என்ன என்று மற்றுமொரு கேள்வியும் எழுகின்றது.

ஏனெனில் சீனாவை மையப்படுத்திய RCEP எனப்படும் இந்த ஒப்பந்தம் பற்றிய உரையாடல் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக 2020ஆம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கைச்சாத்திடப்படும் வரை நடைபெற்றிருக்கிறது.

இந்தக்காலப் பகுதிலேதான், 2012ஆம் TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2017இல் செயலிழந்திருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் முனைய அபிவிருத்தி குறித்த ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்சார் விடயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அவுஸ்திரேலியா, ஜப்பான், மாலைதீவு ஆகிய நாடுகள் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை என்பது அமெரிக்க இராஜதந்திரத்திரப் பலவீனம் என்ற முடிவுக்கு நேரடியாகவே வந்துவிடலாம்.

இப்படிப் பலவீனமானவொரு நிலையிலும் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் பொருளாதாரச் செயற்பாடுகள் தவிர்த்துப் பாதுகாப்பு விடயங்களில் அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் தம்முடன் நிற்க வேண்டுமென்ற அமெரிக்க அணுகுமுறை என்பது, இலங்கை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு வாய்ப்பாகவே இருக்குமென அவதானிகள் கருதுகின்றனர்.

ஏனெனில் ரோகின்யா முஸ்லிம்களை இன அழிப்புச் செய்து வரும் மியன்மார் அரசும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது.

இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தாலும், மியன்மார் அரசுடன் நரேந்திரமோடி அரசு உறவைப் பேணி வருகின்றது. நீர்முழ்கிக் கப்பல் ஒன்றையும் இந்தியா மியன்மாருக்கு வழங்கியுள்ளது.

ஆகவே அமெரிக்க, இந்திய அரசுகளின் இவ்வாறான அணுகுமுறைகள் அரசியல் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பற்றதொரு நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஒருபுறத்தில் அமெரிக்காவோடு நட்பாக இருக்கும் நாடுகள் சீனாவுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, மறுபுறத்தில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்சார்ந்து நிற்கும் இந்தியா, இனப்படுகொலையில் ஈடுபட்ட மியன்மார் அரசுடன் உறவைப் பேணி வருகின்றது.

சீனாவைப் பிரதானப்படுத்திய RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் இலங்கை இல்லாவிட்டாலும், இந்த நகர்வுகள் இலங்கைக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக சீனாவுடன் ஏற்கனவே செய்துகொண்ட பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்க, இந்திய அரசுகளுடன் நின்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியானதொரு செய்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குக் கிடைத்திருக்கின்றது.

பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முற்றாகவே அடக்கிவிடலாமென இலங்கை கருதுகின்றது. அது ஒன்றுதான் இல்ங்கையின் பிரதான நோக்கமாகவும் உள்ளது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் இந்த அணுகுமுறை புரியாதல்ல. ஆனால் தமது நலன்சார் விவகாரங்களுக்காக இலங்கை விட்டுக் கொடுக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியதொரு தேவையில்லை என்றே அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றது.

ஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகள், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதாவது 2010இல் சரத் பொன்சோகாவுடனும் 2015இல் மைத்திரி- ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து பயணித்திருக்கின்றன.

இது இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் தமிழ்மக்களும் இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறன.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இலங்கை அரசு போரை நிறுத்தும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஈழப்போர் அழிக்கப்பட்டால் மாத்திரமே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு உள்ளிடட அரசியல். பொருளாதார நலனில் சாதகமானதொரு நிலையை உருவாக்கலாமென ஒபாமா அரசாங்கமும் மன்மோகன் சிங் அரசாங்களும் அப்போது நம்பியிருந்தன.

இருந்தாலும் 2009ஆம் ஆண்டு மே மாதததின் பின்னரான சூழலிலேதான் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன அதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது.

2013இல் கொழும்பு போட் சிற்றி எனப்படும் சர்வதேச நிதி நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம், அம்போந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் மத்தள விமான நிலைய ஒப்பந்தம், 2014இல் முழு ஆசியவையும் கண்காணிக்கக் கூடிய கொழும்பு மருதானை தாமரைக் கோபுரத் திட்டம், 2020இல் அம்பாந்தோட்டைத் துறைமுக நேரடி முதலிட்டு ஒப்பந்தம். உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் அதற்கான ஒப்பந்தங்களை இலங்கையோடு சீனா கைச்சாத்திட்டிருக்கிறது.

இன்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிப் பாதுகாப்புத் திட்டத்தைத் தகர்த்தெறியும் வகையில் RCEP எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா 15 நாடுகளோடு கைச்சாத்திட்டுள்ளது.

இதன் வலியைத் தற்போது அமெரிக்க இந்திய அரசுகளும் இதனை உணர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்த இடத்திலே சுழியோடவேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

Previous Post

பாரிய விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post

சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர தீவிர முயற்சி?

Editor

Editor

Related Posts

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
Next Post
சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர தீவிர முயற்சி?

சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர தீவிர முயற்சி?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy