பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்றத் தவறிய குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்தின் மீது ரஷ்ய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
ரஷ்யாவின் தகவல் கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையின் படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65,670 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷ்ய அரசு நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















