நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை சாப்பிட்டு, அச்சத்தை போக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெஹலியகொட மீன் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகளின் நலனை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெஹலியகொட மீன் சந்தை போன்று நாட்டின் பல பகுதிகளில் மீன் சந்தைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலும் விரைவில் காத்திரமான ஓர் தீர்வினை எட்ட முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.