ஓமானிலிருந்து நாடு திரும்பிய பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தொன்று பளையில் விபத்திற்கு இலக்காகியிருந்தது.
இந்த நிலையில் குறித்த பேருந்தில் பயணித்தவர்களுக்கு ஓமானில் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளும், இலங்கை விமான நிலையத்தில் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டத்தில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் விபத்தின் போது காயங்களுக்கு இலக்கான குறித்த நபர்களை உடனடியாக பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவர்கள், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பளை வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்ன.
ஆனால் அது உண்மைக்கு புறம்பான விடயம் என தெரியவருகிறது. பளை வைத்தியசாலையின் வழமையான சேவைகள் அனைத்தும் வழமை போல் நடைபெறும் நிலையில் அதிகாரிகள் எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.