கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவின் வைத்தியர் ஒருவரும், ஏழு தாதியர்களும் தொற்றிற்குள்ளாகியுள்ளதாக கண்டி மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஈரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் 18 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த மாதம் 26 ஆம் திகதி கண்டி மருத்துவமனையின் ஊழியர்களிற்கிடையில் நடத்திய சீரற்ற பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவின் இரண்டு தாதியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அந்த பிரிவில் பணியாற்றியவர்கள் அனைவரும் இன்று (28) பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கண்டி தேசிய மருத்துவமனையின் தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை விடுதி மூடப்பட்டு, தற்போது நோயாளிகளை கண்டி மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது என்று பிராந்திய மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் கண்டி மருத்துவமனையில் நடைபெறுகின்றன. எந்த நேரத்திலும் மருத்துவமனை மூடப்படும் அபாயம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.