அமெரிக்காவில் தனது மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற இந்திய இளைஞர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து தகவல் தெரிவித்தால் $1,00,000 சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் பட்டேல் (30) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் Hanoverல் உள்ள காபி ஷாப்பில் தனது மனைவி பாலக்கை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
வாடிக்கையாளர்கள் அங்கு இருந்த போதே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இருவரும் அந்த காபி ஷாப்பில் வேலை செய்து வந்த நிலையிலேயே கொலை நடந்துள்ளது.
அந்த சமயத்தில் பட்டேல் 24 வயதானவராகவும், பாலக் 21 வயதானவராகவும் இருந்திருக்கின்றனர். பட்டேல் மீது கொலை வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.
Bhadreshkumar Chetanbhai Patel is wanted for allegedly killing his wife while they were working at a doughnut shop in Maryland in 2015. The FBI is offering a reward of up to $100,000 for information leading to Patel's arrest. #FugitiveFriday https://t.co/5gnFGbdoTG pic.twitter.com/sNh0ZYfCpR
— FBI (@FBI) November 27, 2020
அவர் கடைசியாக நியூஜெர்சியில் உள்ள ஹொட்டலில் இருந்து டாக்சியில் வெளியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் Federal Bureau of Investigation பட்டேலை மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்துள்ளது.
மேலும் அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு $1,00,000 சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், பட்டேலை ஆபத்தானவனாக கருத வேண்டும் எனவும், அவரிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.