முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்த பின்னரே நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பார் என்று நம்பகர வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பஸில் ராஜபக்ச வருவாரா இல்லையா என்கிற சந்தேகம் தொடந்தும் வலுத்து வருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தில், அரச தரப்பிலுள்ள ஓரிரு அமைச்சர்கள் இணைந்து, ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான குறிப்பிட்ட அமைச்சரிடம் இதுபற்றி வினவிய போது, பஸில் ராஜபக்ச இப்போதைக்கு நாடாளுமன்றத்திற்குப் பிரவேகிக்க மாட்டார் என பதிலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அடுத்து பிரதமர் பதவியை பஸில் ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்கிற பேச்சும் அரச மட்டத்தில் பேசுபொருளாக காணப்படுகிறது.
இதேவேளை, தமது அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிவிட்டு இலங்கைப் பிரஜாவுரிமையுடனேயே அவர் நாடாளுமன்றம் பிரவேசிப்பார் என்றும் அவர் கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.