• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்.. முக்கிய செய்தி..

Editor by Editor
November 30, 2020
in இலங்கைச் செய்திகள்
0
வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்.. முக்கிய செய்தி..

????????????????????????????????????

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிருவாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு திட்ட பிரேரனைக்கு இன்று திங்கட்கிழமை சபைக்கு வருகை தந்த சபை உறுப்பினர்கள் பிரேரனை கூட்டத்தினை நடாத்தாமை காரணமாக சபை முன்பாக ஒன்றிணைந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தனர்.

இதன்போது சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கையில்-

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நாளை உயிரோடு இருக்க முடியுமா என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது. எங்களது உறுப்பினர்களை அச்சுறுத்துகின்றார்கள். அத்தோடு இங்கு பொலிஸாரை குவித்து எங்களை அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக சபையை ஒத்தி வைத்தார். ஆனால் பிரதேச சபையில் 38 உத்தியோகத்தர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். ஆனால் 23 சபை உறுப்பினர்களை வைத்து பிரேரனையை நடாத்த துணிவில்லாமல் அச்சம் கொள்கின்றார். இவ்வாறு உள்ள தவிசாளர் இராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்

முறைகேடான தன்மை, உறுப்பினர்கள் மற்றும் மக்களை மதிக்காத தன்மை கடந்த காலங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் இயங்கும் தவிசாளரினால் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மக்கள் சேவைக்கு இங்கு தவிசாளரும், செயலாளரும் இல்லை. இவ்வாறு இருவரும் ஓடி ஒலிப்பதற்காகவா பிரதேச சபையின் நடவடிக்கை இருக்கின்றது என்று மக்கள் கேட்கின்றனர் என சபை உறுப்பினர் கி.சேயோன் மேலும் தெரிவித்தார்.

தவிசாளர் சபையில் இல்லாமல் ஓடி ஒளிகின்றார். இது திருடன் பொலிஸ் விளையாட்டு போன்று உள்ளது. மக்களே விளங்கிக் கொள்ளுங்கள் இதில் யார் திருடன் யார் பொலிஸ் என்று என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் தெரிவித்தார்.

சபையின் சொத்துக்களை எவ்வாறு களவாடலாம் என்று களவாடும் அணியுடன் சேர்ந்து சபையிளை களங்கப்படுத்தி, வரவு செலவுத் திட்டத்தினை கொண்டு செல்ல முடியாமல் தவிசாளர் ஓடியுள்ளார். மக்கள் நலன்களையும் தூக்கி குப்பையில் எறிந்துள்ளார். சபை உறுப்பினர்கள் இங்கு வந்த சமயத்தில் புலானாய்வினர் மற்றும் பொலிஸாரை கொண்டு எங்களுக்கு அச்ச நிலையை ஏற்படுத்துகின்றார்.

சபைக்குட்பட்ட பகுதியில் குத்தகையினை மேற்கொண்ட பிள்ளையானின் ஆதரவாளர்கள், உறவினர்கள் சபைக்கு அதிகமான நிதியை செலுத்த வேண்டி உள்ளது. இவை மிகவிரைவில் வெளிவரும். சபையில் பல இலட்சக்கணக்கில் குத்தகை ஊழல் இடம்பெற்றுள்ளது. இவர்கள் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் சகாக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதாலும். இன்றும் இதற்கு நடவடிக்கை இல்லை ஏனெனில் இவர்கள் சிறிய முதலை அவர் பெரிய முதலை. இந்த சபையின் தொடர்ச்சியான ஊழல் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை வெற்றி பெற வைப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சகோதரர் அகிலா பதினைந்து உறுப்பினர்களை துரத்தி அச்சுறுத்தல் செய்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி தெரிவித்தார்.

ஆதரவு வழங்கும் பட்சத்தில் பணம் வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், அபிவிருத்திகள் செய்து தருவதாகவும் எமது உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார். இதனை நிரூபிக்க வேண்டுமானால் சில பகுதியில் வீதிகள் அவசரமாக எந்த அனுமதியும் இல்லாமல் தங்களது நெருங்கியவருடன் இணைந்து புனரமைக்கப்பட்டுள்ளது.

சபை உறுப்பினர்களின் அனுமதியை பெறாமல் தவிசாளர் பணங்களை செலவு செய்துள்ளார். இவர் சபையில் ஊழல்களை செய்துள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஊழலை ஒழிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஓட்டமாவடி பிரதேச சபையின் கடையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட பிரரேரணைக்கு வருமாறு கடிதம் வழங்கப்பட்;ட நிலையில் இன்று சபைக்கு வந்த சமயத்தில் குறித்த உத்தியோகத்தர் எதற்காக இங்கு வந்துள்ளாய், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று என்னை மிரட்டிச் சென்றுள்ளார். அத்தோடு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்று எனக்கு இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என்றும் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கூட்டத்தினை கூட்டுமாறு மாகாண உள்ளுராட்சி அணையாளருக்கு ஞாயிற்றுக்கிழமை மகஜர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை சபை உறுப்பினர்கள் தொலைபேசியூடாக நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரின் பிரகாரம் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் வழங்குமாறும், ஒத்திவைக்கப்பட்டு பதினான்கு நாட்களுக்குள் மீளவும் சபை கூட்டப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் தெரிவித்ததை தொடர்;ந்து சபை உறுப்பினர்கள் கலைந்து சென்றதுடன், இதில் தங்களுக்கு இன்னும் திருப்தி இல்லை என்றும் தெரிவித்தனர்.

Previous Post

மன்னாரில் 4 கொரோனா தொற்றாளர்கள்

Next Post

காங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..! வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
இலங்கைச் செய்திகள்

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
இலங்கைச் செய்திகள்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
Next Post
காங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..! வெளியான முக்கிய தகவல்

காங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..! வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
2026 தொடக்கத்திலேயே பஞ்சகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

2026 தொடக்கத்திலேயே பஞ்சகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025

Recent News

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
2026 தொடக்கத்திலேயே பஞ்சகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

2026 தொடக்கத்திலேயே பஞ்சகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy