கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே நாம் பாடசாலைகளையும் ஒரு
வாரம் நடத்தாமல் முடக்கி வைத்து இருந்தோம். இவற்றையும் நாம் மேற்கொண்டு
செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம்.
இதன் அடிப்படையில் எமது மாவட்டத்தில் 785 குடும்பங்கள் சுய
தனிமைப்படுத்தலிலே உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 458 பேர்களுக்கான
மாதிரிகள் பெறப்பட்டு அவர்களில் 13 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது
நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 15 பேருக்கு
கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை
நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்தார்.



















