சுருக்கு வலை மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு விதிகளை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுங்கு விதிகள் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதும் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (02) மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனினால் வாய்மூல வினா நேரத்தில், சுருக்குவலை செயற்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், மேற்படி ஒழுங்கு விதிகளை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான முறைப்பாடுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் சுருக்கு வலைத் தொழிலை தடுத்து நிறுத்திய போது, அவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு தொடர்ந்தும் குறித்த தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முல்லைத்தீவு பகுதியிலும் சிறு தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக சுருக்குவலை பயன்படுத்துவதற்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்திய கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்திருந்தது.
திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுருக்கு வலைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.


















