தென்னிலங்கையில் கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினுவாங்கொடை – ஒபான பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இவ்வாறு இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இத்தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன், மனைவியின் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதுடன், பின்னர் தாமும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த கணவருக்கு 45 வயது எனவும் மனைவிக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதிகளுக்கு இரு புதல்விகள் உள்ளதாகவும் கூறிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















