நாட்டில் நேற்று 627 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 26,038 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
இதன்படி மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,488 ஆக அதிகரித்தது. தற்போது நாடு முழுவதும் 56 மருத்துவமனைகளில் 6,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 728 பேர் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 19,032 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 433 நபர்கள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.


















