பிரதான சிறை வாயில் காவலர் உள்ளிட்ட பலரை கட்டியணைத்த சிறைச்சாலை காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
‘ஏனையோருக்கு கொரோனா பரப்பியதைப் போன்று, உங்களுக்கும் கொரோனாவை பரப்ப வேண்டும்’ என தெரிவித்து குறித்த அதிகாரி ஏனையோரை கட்டியணைத்தார்.
சம்பவத்தில், வட்டரக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



















