“கட்சி தொடங்க நீங்க முடிவு எடுத்திட்டீங்க – மோதுறதுக்கு நாங்க முடிவு எடுத்துட்டோம்” என ரஜினிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
அம்பேத்கரின் 64ஆம் நினைவு நாளான நேற்று அவரது உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே நான், விஜய்காந்த் ஆகியோர் கட்சி தொடங்கினோம்.
ரஜினிகாந்த் அழுத்தம் காரணமாகவே கட்சி தொடங்குவதாக நான் உறுதியாக நினைக்கிறேன்.
கூட இருந்து யாரோ ரஜினிகாந்தை தூண்டி விடுகிறார்கள். மொத்தமாவே மக்களை அறிவு கெட்ட கூட்டம் என நினைக்கிறார்கள்.
ரஜினியின் தேவை எங்கு உள்ளது? 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல அவரது கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது.
உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவரைக் கூடவா உங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒருவர் பா.ஜ.க காரர், மற்மொருவர் காங்கிரஸ் காரர் எப்படி மாற்றம் கொண்டு வருவீர்? என கடுமையாக சாடியுள்ளார்.




















