களுத்துறை பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் வசிக்கும் 20 ஆயிரம் பேரில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக பண்டாரகமை தெமகமை நிர்வாக சுகாதார பரிசோதகர் எஸ்.யு.மதுஷான் தெரிவித்துள்ளார்.
இந்த பிரதேசத்தில் வசிக்கும் 20 ஆயிரம் பேரில் ஆயிரத்து 541 பேர் மாத்திரமே கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளதுடன் இவர்களில் 547 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் PCR பரிசோதனை செய்துக்கொள்ள மறுப்பதால், இராணுவம் தலையீட்டு பரிசோதனைகளை நடத்த முயற்சித்ததாக தெரியவருகிறது. இந்த பிரதேசத்தை சேர்ந்த மேலும் 18 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது.
இவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த கடும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கடந்த 10 ஆம் திகதி அட்டலுகம பிரதேசத்தில் PCR பரிசோதனைக்கு 400 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் 50 பேர் மாத்திரமே பரிசோதனைக்கு சமூகமளித்திருந்தனர்.
இதனை தவிர கடந்த 2 ஆம் திகதி பொது சுகாதார அதிகாரிகள் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சென்றிருந்த போது கொரோனா தொற்றாளர் ஒருவர் அவர் மீது எச்சில் துப்பிய சம்பவமும் நடந்தது. இந்த நிலைமை தொடர்ந்தால், களுத்துறை மாவட்டம் மிகவும் ஆபத்தான பிரதேசமாக மாறும் எனவும் மதுஷான் குறிப்பிட்டுள்ளார்.