இலங்கையில் மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 368 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 147 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.




















