ஆப்கானிஸ்தான் காபூலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல் நகரில் பயங்கரவாதிகள் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் துரதிர்ஷ்டவசமாக, மக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் அரியன் கூறினார்.
தலைநகரின் மேற்கில் கார் குண்டு வெடித்ததாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரியும் குண்டுவெடிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.



















