மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி தற்போது பெய்த மழை காரணமாக ஆறு போன்று காட்சியளிக்கின்றது.
இங்கு காணப்படும் மைதானம், பாடசாலை வளாகம் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி காணப்படுவதுடன், முக்கிய கட்டடங்களினுள் நீர் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு மாணவர்கள் பாடசாலைக்கு மழைக்கு மத்தியில் வருகை தந்த நிலையிலும், பாடசாலை வளாகத்தினுள் காணப்படும் வெள்ளத்திற்கு மத்தியில் சென்று தங்களது கல்விகளை கற்றமை குறிப்பிடத்தக்கது.