மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானது தெரியவந்தது.
இந்த நிலையில் பெரியகல்லாறினை சேர்ந்த குறித்த இருவரினதும் குடும்ப உறுப்பினர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் 75 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று 45பேருக்கு அன்டிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் தாயும் மகளும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன் ஒருவர் விரிவுரையாளர் எனவும் அவரது மகள் மூலமாகவே இந்த தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட மாணவியுடன் தொடர்புபட்டவரே இவ்வாறு தொற்றுக்குளாகியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் குறிப்பிட்டுள்ளார்.