ஜப்பானிய அரசாங்கம் வடக்கில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்காக 115 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிராவும், மெக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எமிலி பாயியும் கையெழுத்திட்டனர்.
மன்னாரிலும், வவுனியாவிலும் சுமார் 8 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவே மறைமுகமாவோ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டத்துக்காகவே இந்த நிதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிதிவெடியகற்றும் திட்டங்களுக்காக ஜப்பான் 2002ம் ஆண்டு முதல் 38.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.