கனடாவில் இலங்கையர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுந்தரலிங்கம் பெரியதம்பி என்ற 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்காக யோர்க் பிராந்திய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியிருந்தனர்.
சுந்தரலிங்கம் பெரியதம்பி கடைசியாக நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆண்ட்ரின் தெருவில் உள்ள தனது வீட்டிலிருந்து நடந்து சென்ற போது அவதானிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் அவர் சற்று குழப்பமான நிலைமையில் காணப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது குடும்பத்தினர் அவரை மிகவும் வருத்தத்துடன் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துடன் இதனால் குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அவர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.