இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக மேலும் 500 அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதில் 448 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
ஏனைய 52 பேர் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்றால் மேலும் 712பேர் குண மடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 433 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.