பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம்.
ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள், உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள்.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாட்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.
எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.