டிசம்பர் 31 ஆம் திகதி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது ரசிகர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவுக்கு மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மிக பெரிய செருப்படியை தந்திருக்கிறார் –
பெரிய சகுனி குருமூர்த்தி, சின்ன சகுனி ரங்கராஜ், சித்தம் கலங்கிய எச்.ராஜா, கொட்டை எடுத்த கணித புளி மதுவந்தி, சிப் எஸ்.வி.சேகர் போன்ற பல அரைகுறைகளை வைத்து கொண்டு நகரும் தன் அரசியல் பயணம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்து, அதன் விளைவாக தன்னுடைய இந்த அறிவிப்பின் மூலமாக இந்த வகை கூட்டத்திற்க்கு செருப்படி தந்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிவிப்பு அவரின் அரசியல் வருகையை விரும்பிய அவரின் உண்மையான ரசிகர்களுக்கு வருத்தமே. அவர்களை நக்கல் கிண்டல் நையாண்டி செய்வது சரியல்ல, நான் அதை செய்யவும் மாட்டேன்.
மாறாக, அதே வேளையில் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்குள் வைத்து பார்க்காத என் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அவரின் அறிவிப்பு அவரின் தமிழக அரசியல் மீதான தெளிவான பார்வையை காட்டுகிறது.
இடையில் அவருக்குள் சலனத்தை ஏற்படுத்த முயன்ற பலருக்கு ரஜினிகாந்த் சரியான பதிலடி தந்துள்ளார் என முகநூல்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.