யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உறுதிசெய்யப்பட்டுள்ளோர் விபரம் பின்வருமாறு,
உடுவில் – 8பேர் (ஒருவரை தவிர ஏழு பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்)
சண்டிலிப்பாய் – 3 பேர் (தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்)
தெல்லிப்பழை – 1 நபர் (தொற்றாளருடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்)
புதுக்குடியிருப்பு – 1 நபர் (ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்)
ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையம் -1 நபர் என அடையாளப்படுத்தப்பட்டனர்.
எவ்வாறாயினும் இந்த பரிசோதனையில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தள்ளார்.