கடந்த பாராளுமன்றத் தேர்தலின் தோல்வி மற்றும் அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென கட்சிக்குள்ளும் வெளியிலும் விமர்ச்சிக்கின்றனர்.
அதனை நான் பொது வெளியில் கதைக்கவில்லை கட்சிக்குள்ளேயே கதைத்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஆகியவற்றில் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்தது.


















