நேற்று நாட்டில் 484 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,726 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 479 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,977 ஆக அதிகரித்தது.
ஜோர்டானில் இருந்து வந்த மூன்று பேர், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர், கடலோடி ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது 7,247 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,262 ஆக உயர்ந்தது.



















