வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு கிழக்கு வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.