வெலிசறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வத்தளை பிரதேச மருத்துவ அதிகாரி வருண அமரசேகர தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து இன்றையதினம் (11) வத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலிருந்து 10 கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 3 பேர் மத்துமகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து இரண்டாவது கொரோனா அலையில் வத்தளை சுகாதார அலுவலர் பிரிவில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,476 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த மூன்று நடத்துனர்கள் நேற்று (10) வெலிசறை டிப்போவில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுடன் நெருங்கிப் பழகிய 65 பேர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.