வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று 615 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைக்கு வந்த தலா இரண்டு பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.