கடன் செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிடுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கலேவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பெருந்தொகை கடனை செலுத்த வேண்டியி;ருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு பதினைந்து பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாகவும் இதில் 48 வீதம் வெளிநாட்டு கடன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிடுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.