இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளது.
இதள் மூலம் நாட்டில் பதிவன மரணங்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் நேற்றும் (14), இருவர் 12ஆம் திகதியும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 47 வயதான ஆண் ஒருவர், குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாரம்மல மாவட்ட வைத்தியசாலை மற்றும் அங்கிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் 12ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை மற்றும் சிக்கலான சிறுநீரக நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி கிழக்கு, கின்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, சிக்கலான சிறுநீரக நோய் மற்றும் சுவாசப்பாதையில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் 12ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன், குருதியுறைவு, குருதி விஷமடைவு, நுரையீரல் தொற்று மற்றும் வலிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.