• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை….

Editor by Editor
January 15, 2021
in இலங்கைச் செய்திகள்
0
பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளார். இது ஒரு கொலை அச்சுறுத்தலே தான் என தெரிவித்துள்ள தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அம்பாறை மாவட்டம் உஹனையில் 09.01.2021 அன்று நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, ‘பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயல்பட முடியும்’ எனப் போர் முழக்கம் செய்துள்ளார்.

பத்திரிகைகளில் இச்செய்திகள் வெளிவந்தபோது நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் 2009 வரையில் போரின் காலத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை மட்டுமல்ல அதற்கு யார் பொறுப்பாக இருந்தார் என்பதும் இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டையும் நிறுவியுள்ளது.

அதற்கு அப்பால் ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல இலங்கை நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கும் இராணுவமயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும், இனப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேசமக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களையும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தை, இனப் படுகொலை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதி ‘நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொன்றேன்’ என்றால் போர்முனையில் இருந்திருக்கிறேன் என்பது தானே. பிரபாகரனையும் இழுத்துச் சென்று சுட்டேன் என்றால் உயிருடன் நந்திக் கடல் போர்முனையில் பிடிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றிலல்லவா நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அல்லாமல் சுட்டுக் கொன்றேன் என்றால் அது போர்க்குற்றம் தானே. இப்படித்தான் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா? நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா?

நான் அறிந்தவரையில் பிரபாகரன் களத்தில் போராடியிருப்பாரே தவிர சரணடைந்துவிடாத சுபாவம் கொண்டவர். அவரது மகன் பாலச்சந்திரன் அப் போர்க்களத்தின் நடுவே எவ்வளவு அப்பாவித்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதை உலகம் அறியும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூவான் வெலிசாயாவில் பதவி ஏற்பு நிகழ்வில் பதவி ஏற்றார். அச் செய்கையானது நாட்டை ஆண்ட எல்லாள மன்னனைத் துட்டகாமினி போரில் தோற்கடித்தான் என்பதை நினைவூட்டுகிறது அது போல தான் பிரபாகரனை கொன்று வென்றென் என்று தானே கூறுகிறார்.

ஆனால் போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் (சமாதி) அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி. துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன். வரலாறு கூறும், மகா வம்சத்தில் ‘சிங்கள’ என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறில்லாமல் ‘நந்திக்கடலில் போரில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன்’ என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர்களை, பாராளுமன்ற ஜனநாயகத்தை, தமிழ்த் தேச மக்களை இழிவுபடுத்தி நாட்டின் தலைமைத்துவப் பண்புகளை இழந்து நாகரிகத்தை மண்ணில் புதைக்கலாமா?

ஜனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே தான்! எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் பேஸ்புக்; வைகோ கண்டனம்

Next Post

நல்லூரில் மணி அணி அமர்களம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது; வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Editor

Editor

Related Posts

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

December 17, 2025
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
Next Post
நல்லூரில் மணி அணி அமர்களம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது; வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

நல்லூரில் மணி அணி அமர்களம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது; வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy