சமூக வலைதளங்களில் சிறுவன் கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.
அதாவது டிவியில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்க, பாலாவுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்று சிறுவன் ஒருவன் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்க்க முடிகிறது.
அவனை தேற்றும் அவரது தாய் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பிக்பாஸ் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையின் வீடியோவை பதிவிட்டு “அழாதே குட்டி பையா. உன்னுடைய அன்புதான் எனக்கு மிகப்பெரிய கப்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
View this post on Instagram