டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இருவருக்கு நேற்று கொவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதர வைத்திய அதிகாரி காரியால பொது சுகாதார அதிகாரி கதிர்வேல் ஜெய்கணேஸ் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கும் நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரு க்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர்களுக்கு மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.
கண் அறுவை சிகிச்சைக்காக வந்திருந்த பெண் மற்றும் வெட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற வந்திருந்த இளைஞனுக்கு ஆரம்ப சிகிச்சையின் பின்னர் மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது குடும்பத்தினர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.