நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க பெண்ணொருவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி அரசுப்பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவே மேற்கண்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டநிலையில் அண்மையில் ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகிய ஊவதென்னே சுமண தேரரின் விடுதலைக்காக, டயானா முயற்சிகளை மேற்கொண்ருடிருந்தார்.
இதனை ஊவதென்னே சுமண தேரர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரிடையே மிகவும் நெருக்கமான உறவு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.