இலங்கையில் நேற்று 772 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தொற்றுக்கள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,694 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கண்டறியப்பட்டவர்களில், 742 பேர் மினுவாங்கொட-பேலியகொ் COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,778 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 30 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் 7,838 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 52,566 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். COVID-19 தொற்று சந்தேகத்தில் 781 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.