கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இலங்கை 10வது நாடாக தரப்படுத்தப்பட்டள்ளது. நியூசிலாந்து முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சிந்தனைக் குழாமான லோவி நிறுவனம் கிட்டத்தட்ட 100 நாடுகளின் கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து, இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் COVID-19 தொற்றாளர்களின் எண்களையும், உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.
இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தன.
அவுஸ்திரேலியா எட்டாவது இடத்தைப் பிடித்தது, இலங்கை 10 வது இடத்தைப் பிடித்தது.
அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டு, 94 வது இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86 இடங்களில் உள்ளன.
சீனா இந்த பட்டியலில் மதிப்பிடவில்லை. அதன் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையில்லாததால், தரவுகளை சேகரிக்கவில்லை.
பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் பொதுவாக COVID-19 ஐ மிகவும் திறம்பட கையாண்டுள்ளன என நிறுவனம் தெரிவித்துள்ளது
“10 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகள், சுகாதார அவசரநிலையைக் கையாள்வதில் அவர்களின் பெரிய சகாக்களை விட சராசரியாக, அதிக சுறுசுறுப்பானவை என்பதை நிரூபித்தன,” என்று தெரிவித்துள்ளது.