முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திசானாயக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பரந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடிவு செய்துள்ளனர்.
இன்று (28) இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய பயணத்தில் நவீன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
கட்சியின் மறுசீரமைப்பு கட்சி தலைமையிலிருந்து கீழ்மட்டம் வரை நடந்திருக்க வேண்டும் என்றாலும், அவ்வாறு செய்யாததற்கு வருத்தம் தெரிவிப்பதாக நவீன் தெரிவித்தார்.
கட்சியில் சரியான தலைமை மாற்றம் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இரு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பரந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சிப்போம் என்று இருவம் தெரிவித்தனர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள ஒரு பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை இலக்காகக் கொள்வோம் என்றும் தெரிவித்தனர்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்பதற்கு நவீன் அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும், அவர் தொடர்ந்து ஐ.தே.கவுடன் இருப்பார், அதன் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பார் என்றார்.
கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவேன் என்று திசானாயக கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.