மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன் பிடித்துறை முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராச்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாசீவன் தீவு கிராமத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் கையில் பாதாதைகளை கையில் ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு, தியாவட்டவான், ஓட்டமாவடி, ஆகிய கிராமங்களை ஊடறுத்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் சுடும் வெயில் என்றும் பாராமல் கால் நடையாக ஊர்வலமாக வாழைச்சேனையை வந்தடைந்தனர்.
சிவன் தீவு மண் வளத்தைச் சுரண்டாதே, எமது வளம் எமக்கு வேண்டும், சிவன் தீவு மக்களின் குடி நீரை உப்பு நீராக்காதே,மண் மாபியாக்களை வெளியேற்று, என்பன போன்ற வாசகங்களைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னணிகள் மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது….