திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அங்கு வந்து சென்றதாக, தகவல்கள் பரவியதை அடுத்தே, வெந்நீரூற்றுப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெந்நீரூற்று பகுதி பிரதான வாயில் கதவில் ‘வெளிநபர்கள், உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது’ என அறிவித்தல், ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் , பிரதான வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.



















