ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்விற்காக இந்தியாவினதும் உலக நாடுகளினதும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.
முக்கிய நாடுகளின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 15 நாடுகளின் ஆதரவை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இலங்கை அரசாங்கத்தின் மிக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அரசை இலங்கை முதலில் நாடியது என தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் மிக முக்கிய வட்டாரங்கள், இலங்கையின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளன.
சீனாவும் ரஸ்யாவும் ஏற்கனவே இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அரசியல் நகர்வினை கருத்தில்கொண்டு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.