களனி கங்கையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து நவகமுவ காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் ரனாலை – சுதவில மற்றும் கலேவல – மெதபெத்த பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 18 வயதுகளையுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.